பெருமையுடன் பச்சை குத்தி கொள்ள பெரிதாக ஒன்றும் சாதிக்க வில்லை,
பல அவமானங்களை தாண்டி,
பல இழிவுகளை சுமந்து,
தேவையற்ற பிரச்சனைகள் கடந்து,
முன்னேறி,
சிந்தித்து, செயல்பட்டு,
பல கரங்களை பிடித்து,
சிலர்க்கு உதவி செய்து அதில் திருப்தி அடைந்து,
எண்ணற்ற ஏளன பார்வைகளை பொறுத்து கொண்டு,
வெட்டிய அனைத்து குழிகளிலும் விழுந்து, எழுந்து,
அதிர்ஷ்டம் என்று ஒரே சொல்லில் என் அனைத்து வெற்றிகளையும் புதைப்பவர்களை மன்னித்து,
ஒவ்வொரு நாளும் ஏதேனும் நல்ல குறிப்பு தோன்றாதா , நல்ல படைப்பு ஏதேனும் படைப்போமே என்று பார்த்து கொண்டிருக்கும் நான் எழுத்தாளர் என்ற பெருமையுடன் மாய்வேன்!
உன் சீண்டல்களும் கேலி பேச்சுகளும் தாங்குகின்ற சக்தியை கொடுத்ததும் என் பேனா தானே?
தூற்றுவதில் சந்தோஷம் அடையும் நீ, ஒரு முறை பாராட்டி பார் – அதன் சந்தோஷம் பன்மடங்கு பெரிது என்று புரியும்!
திருந்துவாய் என்று நம்பிக்கையுடன்
கவிப்ரியா
Tamil is a touching language, isn’t it? Sometimes writings like this remind me.
LikeLiked by 1 person
This is my very first post in tamil. I never had the guts, but this post had to be strong enough that I chose to pen it in tamil. 🙂 thanks Nandhini 🙂
LikeLiked by 1 person
You did a good job in bringing the Tamil writer in you. Certain joys can never be replaced!
LikeLike
written nicely !:)
LikeLiked by 1 person
Thanks Srivatsan 🙂
LikeLike
Very nice…. Tamizh is a lovely language…. Very expressive
LikeLiked by 1 person